ஞாயிறு, 13 ஜூலை, 2014

வவுனியா திருநாவற்குளத்தில் 25 ஆவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு ஆலய கட்டிட நிதி அன்பளிப்பு.!!!(படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியாவில் 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி  தொடர்ந்து பல சமூக பணிகள் கழகத்தின் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், இச் சமூகப் பணிகள் கல்வி, விளையாட்டு, ஆலய அபிவிருத்திகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) குடியேற்ற கிராமங்களில் ஒன்றாகிய திருநாவற்குளத்தில் அமையப்பெற்றுள்ள நாகதம்பிரான் ஆலய கட்டிட வேலைகளுக்கென,  25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட் அமைப்பின் லண்டன் கிளை முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்ட ஒருதொகைப்பணம் ஆலய நிர்வாகத்தினரிடம் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கையளித்தார்.


இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் உபதலைவர் திரு சி.கணேசமூர்த்தி, செயலாளர் செல்வி கே.பகவதி, பொருளாளர் திரு த.இலங்கைரத்னம், உப செயலாளர்  சி.குகதாசன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களான ராஜா, சுரேஷ்குமார், காண்டி ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக