(ஓவியன்) வவுனியாவில் 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி தொடர்ந்து பல சமூக பணிகள் கழகத்தின் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், இச் சமூகப் பணிகள் கல்வி, விளையாட்டு, ஆலய அபிவிருத்திகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தெற்கிலுப்பைக்குளத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கட்டிட வேலைகளுக்கென, 25 ஆவது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான தோழர் சங்கர் ஐயா அவர்களினால் வழங்கப்பட்ட ஒருதொகைப்பணம் ஆலய நிர்வாகத்தினரிடம் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் வைத்து, வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு கே.பாலகிருஷ்னன், செயலாளர் திரு பி.சதீஸ்குமார், பொருளாளர் திரு வி.அருட்செல்வன், நிர்வாக சபை உறுப்பினர்களான திரு.திருச்செல்வம் திரு. கோகிலகுமார், திரு. சிறிகாந்தன், திரு. வசந்த மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களான யோகராஜன், வின்சன் கெனடி, சிறி, சுரேஷ்குமார், காண்டி, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக