திங்கள், 23 ஜூன், 2014

வெள்ளவத்தை, தெஹிவளை நோலிமிட்டுக்கு அச்சுறுத்தல் ஐவர் கைது...!!!!

கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள நோலிமிட் ஆடை நிறுவனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் ஐந்துபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த இரண்டு நிறுவனங்களையும் மூடிவிடுமாறு அச்சுறுத்தல் விடுத்தவர்களே கைதுசெய்யப்படடுள்ளனர்.

இன்னும் இரண்டு பேர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கைதுசெய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாணந்துறையில் நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரையான போது அங்கு பொருத்தப்பட்டிருந்த 24 கண்காணிப்பு கமராக்களும் முற்றாக எரிந்துள்ளன.

எனவே அதன் தரவுகளை மீளப்பெற முடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக