வியாழன், 19 ஜூன், 2014

நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!


நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரையும் கடற்படையினர் இன்று காலை காங்கேசன்துறைக்குக் கொண்டுவந்து நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம்
கையளித்திருந்தனர்.

நீரியல்வளத்துறை அதிகாரிகள் இவர்களை இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான் இவர்களை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக