திங்கள், 18 அக்டோபர், 2010

புத்தளம், மாதம்பை வாகன விபத்தில் சிறுமி உயிரிழப்பு..!

புத்தளம், மாதம்பையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் தனது பெற்றோருடன் பயணித்துக் கொண்டிருந்த 05வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். பொலிஸ் அதிகாரி ஒருவரின் வாகனமும், உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மோட்டார் பைசிகளில் நால்வர் பயணித்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அங்கு மரணமடைந்துள்ளார். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மாதம்பை பொலிசார் விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக