வியாழன், 16 செப்டம்பர், 2010

நீல்வூனே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு..!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வழங்குனர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையிலுள்ள வதிவிட இணைப்பாளர் நீல்வூனே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சரினால் எடுத்துக்கூறப்பட்டது. புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான உதவியும் கோரப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ள ப்படவுள்ள 5ஆண்டு திட்டம் தொடர்பான காட்சியும் இதன்போது காண்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக