திங்கள், 26 ஜூலை, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது..!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நீர்கொழும்பு பெரியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களினால் பயன்படுத்தப்பட்டதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக