வெள்ளி, 23 ஜூலை, 2010

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு முரளி ஓய்வு..!

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு ஓய்வு பெற்றுள்ள சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு அரசாங்கம் சார்பாக வாழ்த்துத் தெரிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, முத்தையா முரளிதரன் குறித்து பெருமையடைவதாகவும் உரிய காலத்தில் ஓய்வுபெற்றுள்ள அவர், அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது இறுதிப் போட்டியுடன் 800 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை வீரராக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக