திங்கள், 19 ஏப்ரல், 2010

உலகைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் -அமைச்சர் சம்பிக்க ரணவக்க..!

உலகைப் பாதுகாப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உலக சுற்றாடலைப் பாதுகாப்பது ஒரு நாட்டின் எல்லைக்கு வரையறுக்கப்பட்ட விடயமல்லவெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு உலகநாட்டு மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக