ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

அமைச்சரும் அவரது மகனும் புத்தர் சிலையை உடைத்தனர்!

ஆளும் கட்சிக்குள் இடம்பெற்று வரும் தேர்தல் உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வருகின்றன இதன் ஒரு கட்டமாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரின் மகன் ஆகியோர் புத்தர்சிலை ஒன்றை உடைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்புள்ளயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புத்தர் சிலை ஆளும்கட்சியின் மற்றும் ஒரு வேட்பாளரினால் திறந்து வைக்கப்பட்டதன் காரணமாகவே அதனை அமைச்சரும் மகனும் உடைத்து சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மேற்கத்தைய பாடகர் எகோன் புத்தர் சிலைக்கு முன்னால் நடனமாடியமைக்காக அவரை இலங்கைக்கு வரவேண்டாம் எனத் தெரிவித்த அரசாங்னம் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பொதுமக்கள் அங்கலாய்த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக