வியாழன், 22 ஏப்ரல், 2010

ஏழாவது நாடாளுமன்ற முதல் அமர்வு இன்று, சபாநாயகராக சாமல் ராஜபக்ச தெரிவு..!

ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. இக்கூட்டத் தொடரில் ஜெனரல் சரத்பொன்சேகா கலந்துகொண்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இலங்கையின் 7வது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக சாமல் ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவினை பிரதமர் தி.மு.ஜயரட்ன முன்மொழிந்தார். எதிர்க்கட்சியின் உபதலைவர் கருஜயசூரிய வழிமொழிந்தார். இன்றுகாலை 8.00 மணிக்கு நாடாளுமன்ற முதலாவது அமர்வின் கூட்டத்தொடர் ஆரம்பமானபோதே மேற்படி தெரிவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை, பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக