வெள்ளி, 29 ஜனவரி, 2010

பொன்சேகா தம்மிடம் தஞ்சம் கோரவில்லை -ஆஸி வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு..!!

ஜெனரல் சரத்பொன்சேகா அவுஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோரவில்லை என ஆஸி வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி.செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஜெனரல் சரத்பொன்சேகா அவுஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோருவதாக செய்தி வெளியிட்டிருந்தது லண்டனில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் இதுகுறித்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதன்போது கொழும்பிலுள்ள ஆஸி தூதரகத்திற்கு சரத்பொன்சேகாவிடம் இருந்த எவ்வித கோரிக்கைகளும் கிடைக்கப் பெறவில்லை எனக் கூறியதாக அவுஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இரு விடயங்கள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனவும் ஒன்று அவர் நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் மற்றையது போதுமான பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றார் எனினும் சரத்பொன்சேகாவுக்கு அவுஸ்திரேலியா உதவுமா என கேட்ட கேள்விக்கு அவர் கருத்து தெரிவிக்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக