
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதன் பின்னணி தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை கோத்தபாய ராஜபக்ஷ பெரும்தொகையான பணத்துடன் சிங்கப்ப+ர் சென்றுள்ளார் என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த நேரத்தில் கோத்தபாய ராஜபக்ஷ சிங்கப்பூர் சென்றால் அது பெரும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் என்பதால் அவருக்கு மாரடைப்பு என்றும் சிகிச்சைக்காகவே இவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் அரசாங்க தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் தனக்குச் சொந்தமாக உள்ள பெருந்தொகையான கறுப்பு பணத்தை சிங்கப்பூருக்கு மாற்றி அதனை அங்கு வைப்பில் இட அல்லது முதலீடு செய்ய இவர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாகவும் இரகசிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிங்கப்பூரைப் பொறுத்தவரை இவர் எந்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் வெளியாகும் எந்த நாளிதழிலும் இது குறித்து எச்செய்திகளையும் வெளியிடவில்லை எனவும் சிங்கப்பூரில் உள்ளவர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக