
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த ’சுய தொழில் புரிவோருக்கான சம்மேளனம்’ பேரணியாகச் சென்று ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
வெற்றி பெற்ற நாட்டை காட்டிக் கொடுக்க ஜெனரல் பொன்சேக்காவிற்கு வெட்கம் இல்லையா, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெட்கம் இல்லையா போன்ற பாதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இராணுவத்தை காட்டிக்கொடுத்த பொன்சேக்கா, தேசத்துரோகி பொன்சேக்கா, நாட்டை சர்வதேச சக்திகளுக்கு காட்டிக்கொடுக்கும் பொன்சேக்கா என ஆர்ப்பாட்டக்கார்கள் கோஷங்களை எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக