
தாய்லாந்தில் அண்மையில் ஆயுதங்களுடன் தடுத்துவைக்கப்பட்ட விமானம் இலங்கைக்கே வரவிருந்தது என்று அவ்விமானத்தின் விமானிகள் தெரிவித்ததாக அவர்களின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐவரையும் சந்தித்துப் பேசியபின்னர் அவர்களது வழக்கறிஞர் சோம்சக்சை தொங் இதனைத் தெரிவித்துள்ளார். தமது விமானம் தாய்லாந்தில் எரிபொருளை நிரப்பிய பின்னர் இலங்கைக்கே பயணமாகவிருந்தது என அவர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர். தமக்கும் ஆயுதங்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை மறுக்கும் அவர்கள், குறிப்பிட்ட விமானத்தை இலங்கை நோக்கிச் செலுத்துவதே தமது பணி எனத் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி தாய்லாந்தில் ஆயுதங்களுடன் தரைஇறங்கிய அந்த விமானம் எங்கு செல்லவிருந்தது என்பது குறித்துப் பல்வேறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக