வெள்ளி, 20 மார்ச், 2015

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் சமளங்குளம் அ.த.க. பாடசாலையின் மைதானம் புனரமைப்பு!! (படங்கள் இணைப்பு)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின்  ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மைதானம் இன்றையதினம் வெள்ளிக்கிழமை (20.03) புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சமளங்குளம் யுரேனஸ் கழகம்  மற்றும் சமளங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் விடுத்த  வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசிய இளைஞர்  கழகத்தின் கட்டார்  கிளையின் நிதியுதவியுடன் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும்,பாடசாலை அதிபர் திரு.சிவானந்தன், பாடசாலை ஆசிரியர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சு.காண்டீபன், செயலாளர்  ஸ்ரீ. கேசவன், பொருளாளர் .த.நிகேதன், ஊடக இணைப்பாளர் வ.பிரதீபன், சமளங்குளம் யுரேனஸ் கழகத்தின் தலைவர் திரு.சிம்சுபன், அமைப்பாளர் ஜெயந்தன், உறுப்பினர்களான தனோஜன், விமர்சன், மற்றும், நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக