செவ்வாய், 3 மார்ச், 2015

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மைதானம் புனரமைப்பு!! (படங்கள் இணைப்பு)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின்  ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தின் மைதானம் இன்றையதினம் திங்கட்கிழமை  (02.03)
 புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

வித்தியாலய அதிபர் திரு.எஸ்.சசிகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தேசிய இளைஞர்  கழகத்தின் அமெரிக்க கிளையின் நிதியுதவியுடன் பாடசாலை மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், வித்தியாலய அதிபர் திரு.எஸ்.சசிகுமார், பாடசாலை ஆசிரியர் திரு.டி.உமாசுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு.முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் திரு ஸ்ரீ. கேசவன், பொருளாளர் திரு.த.நிகேதன், ஊடக இணைப்பாளர் திரு.சஞ்சீவன் மற்றும் , சேமமடு கிராம முக்கியஸ்தர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

இவ் பாடசாலை மாணவர்களினதும், பாடசாலை பௌதீக வளங்களின் அபிவிருத்திக்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் தங்களாலான உதவிகளை நேரடியாகவோ அல்லது கழகத்தின் ஊடாகவோ உதவ  முன்வரவேண்டும் என தமிழ் தேசிய இளைஞர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக