இந்த கொள்கலனில் ஒன்று மோட்டார் உதிரிபாகங்கள் அடங்கியது என்று கூறப்பட்டது. எனினும் இரண்டு கொள்கலன்களும் பயன்படுத்திய சைக்கிள்கள் என்ற அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த கொள்கலன்கள் இரண்டும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் பெயரில் இயங்கும் நிறுவனத்தின் பெயருக்கே அனுப்பப்பட்டிருந்தன என்று துறைமுக சுங்க தரப்பு தெரிவித்துள்ளது.
இரண்டு கொள்கலன்களும் கடந்த செவ்வாய்கிழமையன்று துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தன. எனினும் குறிப்பிட்டப்படி இரண்டும் பயன்படுத்திய சைக்கிள்கள் அடங்கிய கொள்கலன்கள் இல்லை என்று சுங்கத்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
ஏனெனில் குறிப்பிட்டப்படி 200 சைக்கிள்கள் என்றால் அவற்றுக்கு இரண்டு கொள்கலன்கள் அவசியமில்லை என்பதே சுங்கத்தரப்பின் வாதமாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக