வெள்ளி, 14 நவம்பர், 2014

பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் இராஜதுரை..!!

பெருந்தோட்ட தமிழ் மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பெருமாள் இராஜதுரை தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை இவர்கள் நீண்ட காலமாக லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மஹிந்த சிந்தனையில் பெருந்தோட்ட மக்களுக்கு காணி துண்டு வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த யோசனைத் திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக