
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலமாக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்ற 126 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் பதின்மூன்று லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கில் தற்போது தொண்ணூற்றி ஐந்துவீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. ஐந்து சதவீத நிலப்பரப்பில் மட்டுமே கண்ணிவெடிகள் அகற்றும் பணி எஞ்சியுள்ளது.
கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு, குடிநீர் வசதிகள், அடிப்படை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக