நான்காம் கட்ட ஈழப்போரின் நினைவுக் குறிப்புக்களின் அடிப்படையாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவினால் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி மற்றும் கடற்படையினரின் போரியல் பங்களிப்பு போன்ற விடயங்கள் நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ளார்.
தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ச அரங்கில் இன்று இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
அட்மிரால் வசந்த கரன்னாகொட தற்போது இலங்கை இராஜதந்திர சேவையில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக