புதன், 5 நவம்பர், 2014

விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு இருவர் மரணம்..!!!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கடந்த வாரம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த அதிகாரிகளின் மரணத்தையடுத்து இது குறித்த செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் வனாத்தமுல்லையில் தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் ஒன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. வைபவம் முடிந்து மீண்டும் அலரிமாளிகைக்கு ஜனாதிபதி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

வனாத்தமுல்லையில் இருந்து பேஸ்லைன் வீதி ஊடாக அலரிமாளிகை செல்ல முயன்றபோது, வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக மோட்டார் சைக்கிள் படையணியின் இரண்டு வீரர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மழை காரணமாக வழுக்கி, பல சுற்றுகள் கவிழ்ந்த நிலையில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.



எனினும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடரணி இவர்களை அப்படியே அம்போ என்று விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பொலிசாரால் மீட்கப்பட்ட இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்த நிலையில் இந்தத் தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது.

குறைந்த பட்சம் இந்த இருவரின் மரணம் குறித்து ஜனாதிபதி செயலகம் அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக