ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மரதனில், வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காந்தரூபன் 7 ஆம் நிலை..!!!

இன்று (05/10/2014) காலை கொழும்பில்  LSR சர்வதேச மரதன்  ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.  இவ் நிகழ்வில் 3000-3500 க்கு மேற்பட்ட உலக நாடுகளின் வீரர்கள் பங்குபற்றிய மேற்படி நிகழ்வில் வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் வீரரும், களனிப் பல்கலைக்கழகத்தின் மாணவனுமாகிய கணபதி காந்தரூபன் 7 ஆம் நிலையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் இலங்கைக்கு முதல் 10 இடங்களில் 4ஆம் மற்றும் 7 ஆம் நிலைகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இவ் தேசிய வீரனின் வெற்றிகள் தொடர எமது செய்திப்பிரிவு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக