யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் மீது முகமாலையில் வைத்து இனந்தெரியாதவர்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வீச்சுத் தாக்குதலால் பஸ்ஸின் கண்ணாடி சேதமடைந்ததுடன் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் சிறுகாயங்களுக்குள்ளானார். இவர் பளை வைத்தியசாலையில்
சிகிச்சைபெற்றார். அதன் பின்னர் அவரையும் ஏற்றிக்கொண்டு வழமைபோல அந்த பஸ் கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக