வவுனியா, ஓமந்தை, கோழியாகுளம் பகுதியில் உள்ள வீட்டொன்றில் நித்திரையில் இருந்த சிறுவன் மீது பாம்பு தீண்டியதால் சிறுவன் மரணமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவின் மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை, கோழியாகுளம்
பகுதியில் நேற்று திங்கள் கிழமை இரவு வீட்டில் தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் குறித்த சிறுவன் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவன் அழுதவாறு கையில் ஏதோ கடித்துவிட்டதாக தனது தாயாருக்கு தெரியப்படுத்தியதும் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு இரவு 1 மணியளவில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து பாம்பு சிறுவனின் கையில் பல இடங்களில் தீண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோழியாகுளம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரநாதன் தபிசன் (வயது 3) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, வீட்டின் உட்பகுதியில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளுக்குள் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவின் மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை, கோழியாகுளம்
பகுதியில் நேற்று திங்கள் கிழமை இரவு வீட்டில் தாய் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் குறித்த சிறுவன் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் நுழைந்த பாம்பு தீண்டியுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவன் அழுதவாறு கையில் ஏதோ கடித்துவிட்டதாக தனது தாயாருக்கு தெரியப்படுத்தியதும் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு இரவு 1 மணியளவில் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து பாம்பு சிறுவனின் கையில் பல இடங்களில் தீண்டியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததையடுத்து, சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோழியாகுளம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரநாதன் தபிசன் (வயது 3) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, வீட்டின் உட்பகுதியில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூடைகளுக்குள் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக