இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலாளர் திரு கா.உதயராசா அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. சிறப்பு அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி ஆலய செயலாளர் திரு ஆ.நவரத்தினராசா, மக்கள் சேவை மாமணி திரு நா.சேனாதிராசா மற்றும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் பரிசளிப்பு நிகழ்வில் தங்கப் பதக்கத்தினை, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி செல்வி இ.துசியந்தி அவர்களும், வெள்ளிப் பதக்கத்தை அகிலாண்டேஸ்வரி ஆலய அறநெறி பாடசாலை மாணவி செல்வி கி.புஸ்பராணி, வெண்கலப் பதக்கத்தை அகிலாண்டேஸ்வரி ஆலய அறநெறி பாடசாலை மாணவன் செல்வன் மொ.சலீம் ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் ''வான் கலந்த மாணிக்கவாசகா'' எனும் தலைப்பில் செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களும், ''தாயிற் சிறந்த தயாவான தத்துவனே'' எனும் தலைப்பில் இலக்கியச்சுடர் ஐ.கதிர்காமசேகரன் ஆகியோர் சொற்பொழிவாற்றியமை சிறப்பம்சமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக