திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 50 பேர் கைது...!!!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சுமத்தி ஜனதாக்கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள் 50 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கழகத்தின் செயலாளர் மனோகரனின் தலைமையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரிக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

குறித்த கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை நாம் தமிழர் கட்சியினரும் சென்னை, மாவட்ட நீதிமன்ற கட்டிடத்துக்கு முன்னால் சுப்பிரமணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


எனினும் இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்துரைத்த சுவாமி, இது அரசியலில் சாதாரண விடயம் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக