இலங்கையில் சுமார் 13 சமூக நலத் திட்டங்களுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் நிதியுதவியை வழங்கியுள்ளது.இந்த திட்டங்களுக்காக 27 மில்லியன் ரூபாய்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இவை இலங்கையில் உள்ள 12 தொண்டு நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக வடக்கு கிழக்கு மலையகம் உட்பட்ட பிரதேசங்களிலும் கல்வி வளர்ச்சி, பெண்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி, போரின் பின்னர் இயல்பு வாழ்க்கைக்கான முயற்சிகளுக்கே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக