திங்கள், 23 ஜூன், 2014

சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திர விநியோகம்...!!!

இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த நடைமுறை எதிர்வரும் ஆகஸ்ட் முதல் அமுல்செய்யப்படவுள்ளது.

மூன்று மாதக்கால வரையறையில் விநியோகிக்கப்படும் இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை சுற்றுலாப்பயணிகள் தாம் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மென்ரக வாகனங்களுக்காக பயன்படுத்தலாம்.

சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

இதேவேளை மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக