
தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த நபருக்கு குளியாபிட்டி நீதவான் எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் படங்களே இவ்வாறு பேஸ்புக் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் நடவடிக்கைப் பிரிவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே கிரிவுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கசுன் மதுசங்க எனும் இளைஞன் குளியாபிட்டி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். உயர் தரத்தில் கல்விகற்கும் தனது காதலிக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சினையடுத்து தான் இச்செயலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்ற விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார். குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸாரும், கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் அதிகாரசபையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக