கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை அவரின் மனைவி அனோமா பொன்சேகா நேற்றுமுன்தினம் பிற்பகல் பார்வையிட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு வெலிக்கடைச் சிறைக்கு பொன்சேகா மாற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை இரவு 10.30மணியளவில் பொன்சேகா வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அச்சமயம் திருமதி பொன்சேகாவும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் ஆதரவாளர்களும் சிறைச்சாலைக்கு வெளியே நின்றிருந்தனர். பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நாட்டு மக்களும் இராணுவமும் ஏற்றுக்கொள்ளக்கூடாதென தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் தனது கணவர் குற்றமற்றவர் என்பது தனக்குத் தெரியும் என்றும் அனோமா பொன்சேகா கூறியிருந்தார்.
ஞாயிறு, 3 அக்டோபர், 2010
வெலிக்கடையில் சரத் பொன்சேகாவை பாரியார் பார்வையிட்டார்..!
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை அவரின் மனைவி அனோமா பொன்சேகா நேற்றுமுன்தினம் பிற்பகல் பார்வையிட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு வெலிக்கடைச் சிறைக்கு பொன்சேகா மாற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் வியாழக்கிழமை இரவு 10.30மணியளவில் பொன்சேகா வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அச்சமயம் திருமதி பொன்சேகாவும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் ஆதரவாளர்களும் சிறைச்சாலைக்கு வெளியே நின்றிருந்தனர். பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நாட்டு மக்களும் இராணுவமும் ஏற்றுக்கொள்ளக்கூடாதென தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் தனது கணவர் குற்றமற்றவர் என்பது தனக்குத் தெரியும் என்றும் அனோமா பொன்சேகா கூறியிருந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக