
இன்று அதிகாலை கொழும்பிலும் மற்றும் களுத்துறை போன்ற நகரங்களிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வத்தளை போன்ற பகுதிகளில், வெள்ளம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வானிலை அவதான நிலையத்தில், காலநிலை சம்பந்தமான நாட்குறிப்பேட்டை வழங்கும் அதிகாரி சமிந்த டி சில்வாவுடன் தொடர்பு கொண்டு இதுபற்றி நாம் கேட்ட போது,"தென்மேற்கு பருவ பெயர்ச்சி காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடி முழக்கத்துடன் மழை பெய்யும். மின்னல் தாக்கமும் அதிகரித்திருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். இந்நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்" என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக