திங்கள், 3 மே, 2010

யாழ். குடா நிலையை சீர்படுத்த கட்டளைத் தளபதி முனைப்பு..!

யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் கொலை, கடத்தல், கப்பம் கோருதல், கற்பழித்தல் போன்ற வன்செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு உடனடியாக இறுக்கப்படும் என்று யாழ்.பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் நலன்கருதி மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவற்றை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக