
பிரபலங்கள் பற்றி கிசு கிசுக்களை பரவுவது தவிர்க்க முடியாதது. புகழ் அடைந்ததற்கு கொடுக்க வேண்டிய விலையாக அதை எடுத்துக் கொள்ளவேண்டும்.
என்னைப்பற்றி வந்த வதந்திகளை பார்த்து ஆரம்பத்தில் அதிர்ந்தேன். இப்போது பழக்கமாகி விட்டது. அதை பற்றி கவலைப்படுவது இல்லை. பொருட்படுத்துவதும் இல்லை.
இந்திக்கு போவீர்களா என்று கேட்கிறார்கள். தென் இந்திய மொழி படங்களில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன், இது போதும். இந்திப்பட உலகுக்கு போனால் என்னை ஒரு புதுமுக நடிகையாகத்தான் பார்ப்பார்கள். அதை நான் விரும்பவில்லை. சினிமா வுக்கு வந்த ஆரம்ப கால கட்டங்களில் இந்தி பட வாய்ப்புகள் வந்திருந்தால் நான் ஏற்பது நியாயம். ஆனால் இப்போது இங்கு நல்ல நிலையில் இருக்கிறேன். இதை விட்டு விட்டு அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்ரேயா, திரிஷா, அனுஷ்கா போன்றோருக்கு போட்டியா என்று என்னிடம் கேட்கின்றனர். ஒவ்வொருவரும் அவர்கள் வழியில் செல்கிறார்கள்.
பெரும்பாலான படங்களில் கதாநாயகிகள் மரத்தை சுற்றி ஆடுவதற்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அது மாற வேண்டும். கதாநாயகிகள் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக