செவ்வாய், 27 ஏப்ரல், 2010

விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 7பேர் கைது..!

நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து அந்நாட்டின் தேசிய குற்றப்புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய 7பேரை கைது செய்துள்ளனர் இதுதவிர 16வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது இதன்போது கணனிகள் காகித ஆவணங்கள் தொலைபேசிகள் புகைப்படங்கள் டிவிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையின் போது 40000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006ம்ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002ம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதார குற்றமாகும் மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் ஆராயப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நெதர்லாந்தின் பல்வேறு தமிழ் அமைப்புக்களின் தலைவர் ஒருவரும் அடங்குவதாக நீதி அமைச்சு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக