வியாழன், 11 பிப்ரவரி, 2010

சிவகீத்தாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது –கருணாஅம்மான்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்த மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீத்தா பிரபாகரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு தப்பிச்சென்ற முன்னாள் தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடுதிரும்பி எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வெற்றிக்காக பாடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆர்.மௌனகுருசாமி ஆகியோர் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளதாக தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்விருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். மட்டக்களப்பு பட்டிருப்பு பகுதியில் சிறந்த மக்கள் ஆதரவை கொண்டுள்ள கணேசமூர்த்தி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவார் எவ்வாறெனினும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளித்த மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீத்தா பிரபாகரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பட் அளிக்கப்பட மாட்டாது இதேவேளை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெலளானா கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியில் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக