மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் படையினரின் சோதனைச் சாவடிகளில் மக்கள் இன்னும் சோதனைக்குள்ளாக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.புலிகள் அழிக்கப்பட்டு போர் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சோதனைச்சாவடிகள் அவசியமற்றவை என சுட்டிக்காட்டியுள்ள அவர் இச்சோததனைச் சாவடிகள் அகற்றப்பட்டு மக்களின் இயல்வு வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி, மயிலெம்பாவெளி, தன்னாமுனை, ஓந்தாச்சிமடம், கல்லடிப்பாலம், மண்முனைத்துறை, பட்டியிருப்பு, வலையிறவு, அம்பிலாந்துறை, கல்லாறு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக