
கடந்த 4ம் திகதியன்று லண்டனில் உள்ள இலங்கையின் உயஸ்தானிகரத்தில் பிரவேசித்து இலங்கையின் தேசியக்கொடியை எரியூட்ட முயன்றமை தொடர்பில் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அமைச்சரின் கூற்றுப்படி கடந்த 4ம் திகதி இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குழு ஒன்று இலங்கையின் தேசியக்கொடியை எரியூட்ட முயற்சித்துள்ளது எனினும் அதனை லண்டன் பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பி. ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என ரோஹித்த போகொல்லாகம மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக