
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதை அடுத்து புதுக்குடியிருப்பில் இருந்து அனுராதபுரம் வரையான பஸ்சேவையை நடாத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமக்கான போக்குவரத்துத் தேவையை கவனத்தில் கொள்ளுமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து முள்ளியவளைப் பகுதியில் பணியாற்றும் பாதுகாப்புத் தரப்பினர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். இதேவேளை கொழும்பிலிருந்து யாழ்.பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆசனங்களை பதிவு செய்வதற்காக வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை அடுத்து கூடுதலான பஸ் வண்டிகளை கொழும்பு - யாழ்.சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை போக்குவரத்துச்சபை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக