
மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்குநோய் பரவத் தொடங்கியிருப்பதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த நோய் பரவத் தொடங்கியதுடன் தீவிரத்தன்மை அடைந்து அவசர மருத்துவத் தெவை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே பின்வரும் அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் உடன் வைத்தியரை நாடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தோலில் செஞ்நிற புள்ளிகள் தோன்றுதல் மூக்கி;ல் இருந்து அல்லது முரசிலிருந்து இரத்தம் வழிதல் தொடர்ச்சியாக வாந்தி வாந்தியில் இரத்தம் கலந்திருந்தல் கருமை நிறமாக மலம் கழித்தல் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருத்தல், வயிற்றுநோவு, அதிக தாகம், முகர்வெளிர்தல், மூச்செடுக்க சிரமப்படல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடன் வைத்தியரை நாடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெங்குநுளம்பு பெருகும் இடங்களை அவதானித்து மழைநீர் தேங்கி நிற்காதவாறும் வைத்திருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக