புத்தளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் இன்று புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டவர் புத்தளம் சவீவபுரத்தைச் சேர்ந்த 23வயது மதிக்கதக்க முஹமட் பாபித் (ரிஜ்வான்) கடந்தமாதம் 5ம்திகதி (ஹஜ்ஜூப்பெருநாள் இரவு) புத்தளம் நகரில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியினை அடுத்து ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இத்தாக்குதல் சம்பவத்திற்கு காரணமென புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிராபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரஷ்தாப இளைஞர் நேற்றுமாலை வைத்தியசாலையில் வைத்து காலமானார். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் புத்தளத்தில் சாதாரணமாக நடமாடுவதாகவும் இவர்களை பொலிஸார் கைது செய்ய பின்நிற்பதாகவும் இதன் பின்னணியில் அரசியல் அதிகாரம் இருப்பதாகவும் மரணமான இளைஞரின் உறவினர்கள் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடத்தில் முறையிட்டனர். சட்டத்தையும் ஒழுங்கையும் உரிய முறையில் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.பிற்குறிப்பு: “அதிரடி” இணையத்திற்கு கிடைத்த பிரத்தியேக செய்திகளின்படி.. இந்த சம்பவத்தின் பின்னணியில் கால்நடைகள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் இருக்கிறார். மேலும் பிரதியமைச்சரின் சகாக்களால் புத்தளம் நகரில் பாரிய சீர்கேடுகள் மற்றும் கொலை, கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் பிரதியமைச்சர் பாயிஸ் அரசாங்க தரப்பில் இருப்பதால் இதனை புத்தளம் பொலிஸாரும் கண்டுக் கொள்வதில்லை. இன்று ஒரு அப்பாவி இளைஞனின் உயிர் பிரதியமைச்சரின் 15பேர் கொண்ட காடையர் கும்பலால் மிலேச்சத்தனமான முறையில் நடத்தப்பட்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்த யாரும் முன்வரும் பட்சத்தில் அவர்களுடைய உயிர்களுக்கும் பிரதியமைச்சரின் சகாக்கள் காலக்கெடு விதிக்கிறார்கள். இதுதான் புத்தளத்தின் நிலைமை இன்று ஒரு அப்பாவி இளைஞனின் உயிர் காவுக் கொள்ளப்பட்டுள்ளது நாளை??????.....
நன்றி அதிரடி.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக