வெள்ளி, 18 டிசம்பர், 2009

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நானே வெல்வேன் -ஜனாதிபதி சூழுரை !

ஏதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நாளே வெல்வேன் என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ சூழுரைத்துள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நேற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவி;த்தார். 2005ம் ஆண்டைப் போல் மக்களுக்கும் தேசத்திற்குமாக மீண்டும் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது முதலாவது வெற்றி பயங்கரவாதத்திற்கு எதிராக பெறப்பட்டதை சுட்டிக் காட்டியதுடன் அடுத்த வெற்றி தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்வதாக அமையும் என தெரிவித்துள்ளார். பிளவுப்படுத்தப்பட்டுள்ள நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்துவேன் என 2005ல் தாம் உறுதியளித்தமையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி பிரிவினைக் கோரிக்கைகளை முன்வைத்த ஈவிரக்கமற்ற விடுதலைப்பலிகளை அழித்து எனது வாக்குகளை நிறைவேற்றினேன் என்றார். முன்னதாக தேர்தல் செயலகத்திற்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ வந்த ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரான கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வரவேற்றார். மேலும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவுடன் ஜனாதிபதி கைகுலுக்கி உரையாடினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக