திங்கள், 21 டிசம்பர், 2009

வவுனியாவில் ஒருதொகை தங்க ஆபரணங்களுடன் இருவர் கைது !

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் ஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வவுனியா பொலீசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வேளையில் குறித்த நபர்களிடமிருந்து 325லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை பொலீசார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் வவுனியா பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக