வவுனியா புளியங்குளம் சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விலைமதிக்க முடியாத 39ஆலய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவை புளியங்குளம் பொலீஸ் அதிகாரிகளினால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் ஆலயப் பகுதியில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்தச் சிலைகள் இந்திய சிற்பிகளால் செதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக சிலைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாங்குளம் பொலீஸ் அத்தியட்சகர் ரத்மால்கொடிதுவக்கு இச்சிலைகள் தொடர்பாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதுடன், அவை குறித்து தீர்மானிப்பதற்காக அநுராதபுரத்திலுள்ள தொல்பொருள் நிபுணர்களை புளியங்குளத்திற்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன், 9 டிசம்பர், 2009
வவுனியா புளியங்குளம் மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் புதைக்கப்பட்டிருந்த 39 சிலைகள் மீட்பு !
வவுனியா புளியங்குளம் சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த விலைமதிக்க முடியாத 39ஆலய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவை புளியங்குளம் பொலீஸ் அதிகாரிகளினால் நேற்று மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் ஆலயப் பகுதியில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இந்தச் சிலைகள் இந்திய சிற்பிகளால் செதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக சிலைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இவை புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாங்குளம் பொலீஸ் அத்தியட்சகர் ரத்மால்கொடிதுவக்கு இச்சிலைகள் தொடர்பாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதுடன், அவை குறித்து தீர்மானிப்பதற்காக அநுராதபுரத்திலுள்ள தொல்பொருள் நிபுணர்களை புளியங்குளத்திற்கு அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக