திங்கள், 21 செப்டம்பர், 2009

தமிழர்விடயம் தொடர்பில் தமிழக எம்.பிக்கள் இந்தியப் பிரதமர் சந்திப்பு

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைத் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு விடயமாக நாளை இந்தியப்பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த சந்திப்பினை மேற்கொள்ளவிருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பின்போது இலங்கைத் தமிழர்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கையும் விடுக்கப்படவுள்ளது. அத்துடன் தமிழக மீனவர்களின் கடற்பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் இவர்கள் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளனர் எனவும் தங்கபாலு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக