
ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் டெரி அமரசேகர என்பவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.
அயல் வீட்டில் வசித்து வரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமது வாகன சக்கரங்களின் காற்றைத் திறந்து விட்டதாக குறித்த பெண் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் விடுத்த அழைப்பாணைகளை அவர் உதாசீனம் செய்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸ் மா அதிபர் ஊடாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது தலா ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரை விடுதலை செய்யுமாறு கல்கிஸ்ஸ நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக