இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன நேற்று புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிடம் தனது நியமன சான்றுகளை கையளித்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற சுமூகமான சந்திப்பில், இலங்கை உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை, இந்திய ஜனாதிபதிடம் தெரிவித்து கொண்டார்.
பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட இந்திய ஜனாதிபதி முகர்ஜி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனான முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதியும் இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நெருக்கம், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான அர்ப்பணிப்புகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன நேற்று புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிடம் தனது நியமன சான்றுகளை கையளித்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற சுமூகமான சந்திப்பில், இலங்கை உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை, இந்திய ஜனாதிபதிடம் தெரிவித்து கொண்டார்.
பரஸ்பர வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட இந்திய ஜனாதிபதி முகர்ஜி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனான முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதியும் இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்னவும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நெருக்கம், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான அர்ப்பணிப்புகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக