செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஸ்கைப் ஊடாக ஐ.நா விசாரணைக் குழுவில் 30 பேர் சாட்சியம்....!!!

ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில், இலங்கையைச் சேர்ந்த 30 பேர் வரையில் சாட்சியமளித்துள்ளனர்.
போர்க்குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினரிடம் இவ்வாறு சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சாட்சியமளித்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மாநாட்டில் வாய்மொழி மூல அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அவசர அவசரமாக இலங்கையர்களிடமிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


விசாரணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் அடுத்த வாரம் லண்டன் விஜயம் செய்து சாட்சியங்களை திரட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக