வியாழன், 31 ஜூலை, 2014

ரயில் சாரதிகளின் சாதுரியம்: பெரும் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மக்கள்.....!!!!

ரயில் சாரதிகளின் சாதுரியத்தால் பாரியளவில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ஒன்று, இறுதி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலும், கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொள்ளவிருந்த சந்தர்ப்பம், தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

சமிக்ஞை தொடர்பிலான குளறுபடிகளே விபத்து ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தினை உருவாக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு ரயில்களிலும் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளுடன் சென்றுள்ளது.

திருகோணமலைக்கும் கல்ஓயாவிற்கும் இடையிலான ரயில் பாதையில் குறித்த இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் நேருக்கு நேர் பயணித்துள்ளன.



அநுராதபுரம் ரயில் சமிக்ஞை பிரிவு இந்தப் பகுதியின் சமிக்ஞை கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் பயணிப்பது குறித்து ரயில் சாரதிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலை அடுத்து விரைந்து செயற்பட்ட ரயில் சாரதிகள், திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயிலை 150 கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகாமையிலும், கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலை 142ம் கிலோ மீற்றர் மைல் கல்லிற்கு அருகாமையிலும் நிறுத்திக்கொண்டனர்.

இதனால் பாரியளவில் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக