நெருக்கடியான சூழலில் தாய்வானில் தரையிறங்க முயன்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் 47 பேர் பலியாகினர் எனவும் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாய்வானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு தீவில் இருக்கும் மகோங் விமான
நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது.
இந்த விமானத்தில் ஐம்பத்தி நான்கு பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்ததனர் என தாய்வானின் சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஈ222 என்ற இந்த விமானம் தரையிறங்க முயன்று, பிறகு விபத்திற்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்தது.
இந்த விமானத்தில் ஐம்பத்தி நான்கு பயணிகளும் நான்கு சிப்பந்திகளும் இருந்ததனர் என தாய்வானின் சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜிஈ222 என்ற இந்த விமானம் தரையிறங்க முயன்று, பிறகு விபத்திற்குள்ளானதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக